ஒமிக்ரோன் திரிபை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் – GMOA!

0

நாட்டில் ஒமிக்ரோன் திரிபை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும் மத்தியக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது ஒமிக்ரோன் தொற்று உறுதியானவர் சமூகத்தில் இருப்பதற்கான சாத்தியம் நிலவுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.