ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு இராணுவ அதிகாரியை நியமிக்குமாறும் யோசனை: கொடுக்கப்படும் கடும் அழுத்தம்

0

ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், இவர்களில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட கூடிய பொருத்தமான நபராக எஸ்.அமரசேகர கருதப்படுகிறார்.

அமரசேகர தற்போது தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கையில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வருவதுடன் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளார் எனவும் தெரியவருகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரும் பரிந்துரைக்களப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களை தவிர கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீப் பசரத்ன, நீர்பாசன அமைச்சின் செயலாளர் டி.எம். அனுர திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகிக்கும் பீ.பி. ஜெயசுந்தரவை அந்த பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.