உயிரியல் பூங்காக்கள், மிருகக்காட்சிசாலைகள் மீளத்திறக்கப்பட்டுள்ளன!

0

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய, தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம ஆகிய உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிச்சாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.

இதன்படி, குறித்த உயிரியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சிசாலைகள் இன்று(திங்கட்கிழமை) முதல் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளன.

சுகாதார நடைமுறைகளுக்கமைய அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.