சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராகின்றார் சுமந்திரன்?

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

இந்நிலையில், வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிய வருகின்றது.

விரைவில், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.