15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : நிர்வாணப் படத்தை பேஸ்புக்கில் வெளியிடப் போவதாக தாய்க்கு தொலைபேசியில் தெரிவிப்பு

0

15 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலசோலை மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 மற்றும் 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவர்கள் இவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி சிறுமியின் தாய்க்கு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு உங்களது மகளின் நிர்வாணப் படங்கள் சில தம்மிடம் உள்ளது.

அவற்றை பேஸ்புக்கில் பதிவேற்றப் போகிறோம் எனத் தெரிவித்ததாக அத்தாய் செய்த முறைப்பாட்டில் கூறியுள்ளார். பின்னர் இது தொடர்பில் தமது மகளிடம் பெற்றோர் விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

பின்னர் அன்றைய தினம் இரவே இது தொடர்பில் சந்தேக நபர்களிடம் விசாரிப்பதற்காக பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று பாலச்சோலை பிரதேசத்தில் சந்தேக நபர்களைச் சந்தித்துள்ளார்.

இதன்போது சந்தேக நபர்கள் அச்சிறுமியை அப்பிரதேசத்தில் பாழடைந்த பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இருவரும் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அச்சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.