LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உலகம்

நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

August 15, 2025 · Tamil Ceylon LK

இந்தியா இன்று தனது 79 சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்று அறி​வுறுத்தியுள்​ளார்.

கடந்த 1947 ஆம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. இரு நாடுகளுக்குமிடையிலான பிரி​வினை​யின்​போது ஏற்​பட்ட வன்​முறை சம்​பவங்​களில் சுமார் 20 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 2 கோடிக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர்.

இதை நினை​வு​கூரும் வகை​யில் ஓகஸ்ட் 14 ஆம் திகதி, பிரி​வினை கொடுமை​கள் நினைவு தின​மாக அறிவிக்​கப்​பட்​டது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந் நிலையில், பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில்,

இந்த தினம் இந்​திய வரலாற்​றில் மிக​வும் துயர​மான நாள் ஆகும். நாட்டில் பெரும் எண்​ணிக்​கையி​லான மக்​கள் துன்​பம், வேதனை​களை அனுப​வித்​தனர். கற்​பனைக்கு எட்​டாத வகை​யில் மிகப் ​பெரிய இழப்​பு​களை எதிர்​கொண்​டனர்.

எனினும் தாங்க முடி​யாத வலி, வேதனையை மக்​கள் துணிச்​சலுடன் எதிர்​கொண்​டனர். வீழ்ச்​சி​யில் இருந்து எழுச்சி பெற்ற மக்​கள், வளர்ச்​சிப் பாதை​யில் பல்​வேறு மைல்​கற்​களை எட்டி புதிய சாதனை​களை படைத்​தனர். இந்த நாள் நமக்கு ஒரு படிப்​பினையை கற்​றுத் தரு​கிறது. நாம் சமூக நல்​லிணக்​கத்தை வலுப்​படுத்த வேண்​டும். இதன்​மூலமே நாட்​டின் ஒற்​றுமையை வலுப்​படுத்த முடி​யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›