பாதாள உலக குழு, போதைப்பொருள் கடத்தலை ஒடுக்க புதிய திட்டம்.
நாட்டில் பாதாள உலக குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்கு முப்படைகள், பொதுமக்கள் ஆதரவுடன்
Published August 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் பாதாள உலக குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்கு முப்படைகள், பொதுமக்கள் ஆதரவுடன் நுட்பமான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சில அரசியல் மற்றும் பொலிஸ் ஆதரவுடன் இக் குற்றங்கள் நடப்பதாகவும், சட்டத்தை நிலைநாட்டுவதில் அரசியல் செல்வாக்கு இல்லை என்றும், குற்றங்களை மறைக்க உத்தரவுகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.