யாழில் – பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் மீட்பு.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்ட உரை பை தொடர்பாக கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றினை நீதிமன்றில் பரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.