கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குவிந்த மக்கள்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி...
Published August 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிபொது மக்கள் குவிந்துள்ளமையால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கலகத்தடுப்பு பொலிஸாரும் சிறப்புப் படையினரும் அழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

