துபாய் பாதாள உலகக்குழுவால் திலீப பீரிஸுக்கு கொலை மிரட்டல்.
ஜனாதிபதி வழக்கறிஞர் மற்றும் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸின்...
Published August 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஜனாதிபதி வழக்கறிஞர் மற்றும் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸின் உயிருக்கு, துபாயில் மறைந்திருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சதி தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவரது பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திலீப பீரிஸின் வீட்டையும் அவர் பயணிக்கும் போது பாதுகாப்பதற்காக இந்த சிறப்பு பொலிஸ் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.