சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.
நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 1,53,05,054 சுற்றுலாப் பயணிகள்...
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 1,53,05,054 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் இதுவரையில் 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள், அவர்களில் 38,456 சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
மேலும், பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.