உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸ் மா அதிபர்!
இலங்கை சேர்ந்த ஒரு பெரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த...
இலங்கை சேர்ந்த ஒரு பெரிய குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் ஒரு பெண் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தொடர்பில் புதிய பொலிஸ் மா அதிபர் தெளிவுபடுத்தினார்.
– பொலிஸ் மா அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பாணந்துரை நிலங்க, பாக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
கூடுதலாக, பாக்கோ சமனின் மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் எனவும் சுட்டிக்கட்டினார்.
இந்நிலையில், சந்தேகநபர்களை வெகுவிரைவில் நாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.