ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு 6.0 அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.