இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு நடத்தப்படுகிறது.
இந்தப் பிரச்சினையை நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சகம் முன்னர் ஒப்புக்கொண்டபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான நிலையில், நாளை காலை 8 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பணிப்புறக்கணிப்பின்போதும், அவசர மற்றும் உயிர்காக்கும் சேவைகள் இன்னும் வழங்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.