2 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2 கிலோ 755 கிராம் ஹெரோய் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ அருகே வைத்து குறித்த சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




