51,969 மாணவர்கள் சித்தி.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்...
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 51,969 மாணவர்கள், அதாவது மொத்த பரீட்சார்த்திகளில் 17.11% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியில் சிங்கள மொழிக்கு 140 வெட்டுப்புள்ளிகளும், தமிழ் மொழிக்கு 134 வெட்டுப்புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சிங்கள மொழி மூலமான பரீட்சையில் அதிகபட்ச மதிப்பெண் 198 காலியிலிருந்தும், தமிழ் மொழி மூலமான பரிட்சையில் அதிகபட்ச மதிப்பெண் 194 யாழ்ப்பாணத்திலிருந்தும் பெறப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.