அனுமதியின்றி 3500 கிலோ கழிவு தேயிலை கடத்தல் – லொறியுடன் இருவர் கைது !
கம்பளை, வெலம்பொடவிலிருந்து தலவாக்கலைக்கு கழிவு தேயிலை கொண்டு..
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியுடன், இரண்டு சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் இன்று (07) கைது செய்துள்ளனர்.
கம்பளை, வெலம்பொடவிலிருந்து தலவாக்கலைக்கு கழிவு தேயிலை கொண்டு செல்லப்படுவதாக ஹட்டன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வைத்து குறித்த லொறியை பொலிஸார் நிறுத்தி சோதனை செய்தனர்.
கழிவு தேயிலையை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் லொறிக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், சாரதி மற்றும் உதவியாளர் குறித்த லொறியையும் பொலிஸார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கழிவு தேயிலை மற்றும் சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள், என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.