காஸா குடியிருப்புக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்.
காஸா நகரில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய...
Published September 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
காஸா நகரில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில்,
நேற்று, இடம்பெயர்ந்த பலஸ்தீனக் குடும்பங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுகளை வீசி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.
இவ் இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மேலும், காஸா நகரை முழுமையாக கைப்பற்ற ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒக்டோபர் 2023ல் போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் இராணுவத்தால் காஸாவில் இதுவரை 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 162,367 பேர் காயமடைந்துள்ளனர்.