களுதாவளை பௌர்ணமி கலை விழா
களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் பௌர்ணமி கலை விழா நிகழ்வு
களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் பௌர்ணமி கலை விழா நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் இணை ஏற்பாட்டில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அ.மனேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், மேலும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணீதரன், களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபர் க.சத்தியமோகன், ஆலயங்களின் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

