ரணில் விக்ரமசிங்க – தகுந்த நேரம், காலம் பார்த்து அறிவிப்பார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வது தொடர்பில்...
Published September 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
– ருவன் விஜேவர்தன மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்றும், அவர் பாராளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார்.
ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.