பாதாள உலகம் முழுமையாக ஒழிக்கப்படும் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன.

"நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை...

Published September 8, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

“நாட்டில் மீண்டும் ஒரு பாதாள உலகம் உருவாகுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்போது அந்த ஊழல் அரசியல் காலம் முடிந்துவிட்டது” என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

– ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

பாதாள உலகம் தனித்தனியாக செயற்படவில்லை. பாதாள உலகம் அரசியலால் வளர்க்கப்பட்டது. பின்னர், நெருக்கடி வந்தபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் சூழ்நிலையாக மாறியுள்ளது. பாதாள உலகம் இலங்கைக்குள் மட்டுமல்ல, வெளியேயும் இயங்கி வருகின்றது. இப்போது, அதை நாங்கள் ஒழித்து வருகின்றோம்.

இப்போது, பாதாள உலகம் இலங்கைக்குள் மட்டுமே செயல்படும் ஒன்றல்ல என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும். பாதாள உலகம் இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பின்னர் அந்த அளவிற்கு பாதாள உலகத்திற்கு யார் உணவளித்தனர்? இந்த அரசாங்கம் இல்லையெனில், நாடு அழிக்கப்பட்டு விடும்.

பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கிறோம். பொதுப் போக்குவரத்திற்கு நிலையான பேருந்துகள் பயன்படுத்தப்படும் ஒரு நிலையை அடைந்துவிட்டோம். அந்த நடவடிக்கைகளை நாம் முன்னோக்கி எடுக்க வேண்டும். அதனால்தான் 76 ஆண்டுகளாக தவறான பாதையில் சென்ற ஒரு நாட்டை இரண்டு நாட்களில் சரியான பாதைக்குக் கொண்டுவருவது எளிதான காரியம் அல்ல. நாங்கள் நிச்சயமாக மாற்றுவோம். ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *