சட்டவிரோத கடவுச்சீட்டுக்களுடன் இருவர் கைது.
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல...
Published September 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேக நபர் கணேமுல்லயைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.