ரணிலின் விசேட அறிக்கை.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள்...
Published September 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேபாளத்தில் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியவை இளைஞர்களால் எரிக்கப்பட்டது குறித்து, இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அவமரியாதை என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அந்த நாட்டில் அரசியலமைப்பு இல்லை என்றும், நிலவுகின்ற குழப்ப நிலையை கட்டுப்படுத்த நிர்வாக பொறுப்பை இராணுவமே ஏற்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புத்தர் பிறந்த நேபாளம், இலங்கைக்குச் சிறப்பு இடம் பெறும் நாடாக இருப்பதை நினைவுபடுத்திய ரணில், புத்தரின் தர்மத்தை முன்மாதிரியாக அந்நாட்டு அரசாங்கம் பின்பற்றும் என்ற நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.