சஷீந்திரவிற்கு தொடரும் விளக்கமறியல்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.