தீவிரமடையும் மின்சார சபை தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை

Published September 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தன.

அதன்படி, முதல் கட்டமாக சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 4 ஆம் திகதி தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை 11 நாட்கள் கடந்துள்ள போதிலும், அதிகாரிகள் இதுவரை தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டதாக இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் நடைபெறும் தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *