போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது.
அனுராதபுரத்தின் மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி...
Published September 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அனுராதபுரத்தின் மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் 145 தாள்கள் மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்படும் பல மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மதவாச்சி பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு, ஹபரணை பகுதிக்கு வந்து அவற்றை மாற்றிக் கொண்டதாகவும், இந்த மோசடி நீண்ட காலமாக நடந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.