நாடு திரும்பினார் துனித்.

இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே, தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவரும் நாடு திரும்பியுள்ளார்.
துனித் வெல்லாலகேவின் தந்தை திடீர் மாரடைப்பால் நேற்று (18) இரவு உயிரிழந்த அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லாலகே விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




