மாகாண சபை தேர்தல்கள் அடுத்த ஆண்டில் -பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க

மாகாண சபை தேர்தல்கள் அடுத்த ஆண்டில் நடத்துவதற்கு முயற்சி செய்வோம் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்

Published September 22, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மாகாண சபை தேர்தல்கள் அடுத்த ஆண்டில் நடத்துவதற்கு முயற்சி செய்வோம் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம் தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அவற்றிற்கு தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என மேலும் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிஙக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் நடைபெறும் நடமாடும் சேவையை நிகழ்வில் கலந்து கொணடதோடு அலுவலத்தையும் கண்காணித்தார்

இந்நிகழ்வில் S.சிவறஞ்சினி வடமாகாண பரத் தொழில் ஆணையாளர் 

K.நாகேந்திரன் – வடமாகாண அலுவலக உதவி தொழில் ஆணையாளர்

A.அன்ரன் தனேஸ் – யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் 

 யாழ் மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரிகள் நடமாடும் சேவையை பெற வந்த பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *