நவீன எண் தகடுகள் விரைவில் – அமைச்சர் பிமல் கருத்து.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்...
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசியல் நடவடிக்கைகளில் ஊழல் மற்றும் அலட்சியம் காரணமாக மோட்டார் போக்குவரத்துத் துறை (DMT) சுமார் 10 ஆண்டுகளாக முன்னேறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
– பாராளுமன்ற அவையில் இன்று (26) அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன எண் தகடுகள் நவம்பர் 15 ஆம் திகதிக்குள் வழங்கப்படும்.
மேலும், சந்தையில் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள் தற்போது எண் தகடுகள் இல்லாமல் இயங்குகின்றன என்று அமைச்சர் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
புதிய ஓட்டுநர் உரிமம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், எண் தகடுகள் இல்லாத வாகனங்களின் பிரச்சினையைத் தீர்க்க அடுத்த வாரம் தற்காலிக நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.