கடற்பகுதிகளில் பலத்த மழை
கொழும்பில் இருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பில் இருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இன்று பிற்பகல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் காற்று 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலியில் இருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து மன்னார்,
காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு சற்று கொந்தளிப்பாக இருக்கும்.
எனவே குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது