தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது !

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்றையதினம் திங்கட்கிழமை 29ம் திகதி

Published September 30, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்றையதினம் திங்கட்கிழமை 29ம் திகதி தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற செயல் இடம்பெற்றிருக்கிறது. இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோத தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சதேகநபர் சம்மாந்துறை விளினியடி 02 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என சம்மாந்துறை பொலிஸார் சுட்டிக்காட்ட்டியுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் நெறிப்படுத்தலிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.

மேலும் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் உட்பட குறித்த சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *