தப்பியோடிய சிறுவர்கள் – ஐவர் கைது.
கம்பஹா - சபுகஸ்கந்த மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திலிருந்து...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கம்பஹா – சபுகஸ்கந்த மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோடிய நிலையில், அதில் ஐவர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நிலையத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில், 4 சிறுவர்களைத் தவிர, மீதி 11 சிறுவர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், தப்பியோடியவர்கள் 15 முதல் 17 வயதுக்குபட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளிலும், தப்பியயோடியவர்களை தேடும் பணிகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.b