ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சின் அறிவிப்பு.
நாட்டில் பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை...
Published October 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாட்டில் பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளார்.
2023 மார்ச் 25ஆம் திகதி நடைபெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான போட்டி பரீட்சையைப் பற்றிய வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் முடிவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அதற்குப் பிறகு மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.