பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.
நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல்...
Published October 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (05) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கம் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய பாரிய மின்னல் தாக்கங்கள் மற்றும் அதிகரித்த காற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.