ஆதிக்கம் செலுத்தும் இந்திய சுற்றுலா பயணிகள்.
அக்டோபர் மாதத்தில் இதுவரை மொத்தம் 34,046 சுற்றுலாப் பயணிகள்...
அக்டோபர் மாதத்தில் இதுவரை மொத்தம் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் இத் தரவுகளின்படி,
– இந்தியாவில் இருந்து மொத்தம் 10,738 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர், இது 31.5% ஆகும்.
– சீனாவிலிருந்து 3,684 சுற்றுலா பயணிகள்.
– ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,200 சுற்றுலா பயணிகள்.
– ஜெர்மனியிலிருந்து 1,988 மற்றும் 1,577 பங்களாதேஷ் நாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், அக்டோபர் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,759,540 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 386,030 பேர் இந்தியாவிலிருந்தும், 164,093 பேர் இங்கிலாந்திலிருந்தும், 123,414 பேர் ரஷ்யாவிலிருந்தும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.