#News Alert இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது.
2025 பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்...
Published October 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கேஸில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர், நேபாளத்தில் இன்று அக்தொ பர் கைது செய்யப்பட்டனர்.
25 வயதான இஷாரா செவ்வந்தி, கொலைக்கு உதவியாகவும், திட்டமிடுபவராகவும் செயல்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலை நடந்ததிலிருந்து தலைமறைவாக இருந்த இஷாரா, நேபாள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.