இலங்கை ஆசிரியிர் சங்கம் மூன்றாவது நாளாகவும் போராட்டம் !
இலங்கை ஆசிரியிர் சங்கத்தினர் மூன்றாவது நாளாகவும் ஆளுந...
இலங்கை ஆசிரியிர் சங்கத்தினர் மூன்றாவது நாளாகவும் ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாண ஆசிரியர்கள், சரியான இடமாற்றக் கொள்கை அமலாக்கம் மற்றும் பின்தங்கிய மற்றும் அதிகஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான நீண்டகால இடமாற்றக் கோரிக்கைகளை முன்னிறுத்தி வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்நேரத்தில், அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, பொலிஸார் தடுத்து நிறுத்த, சிறிது பதற்றம் ஏற்பட்டது.
மேலும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
