தொழில்முறை பொறுப்பை நிறைவேற்றும் அரச சேவை நாட்டுக்கு அவசியம்
ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட
ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்முறை, திறன், அந்த தொழிலுடன்பிணைந் ஒழுக்கம் மற்றும் பொறுப்பு என்பவற்றுடன் கூடிய அரச சேவை நாட்டிற்கு தேவை. பெருமைமிக்க மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்ட இலங்கை விமானப்படை, அந்த தொழில்முறையை தொடர்ந்து பாதுகாத்து வரும் ஒரு படையினர் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடெட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
கடல் மார்க்கத்தில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதில் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். அனர்த்த காலங்களில் இலங்கை விமானப்படை ஆற்றிய பரந்தளவிளவிலான பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
‘சுரகிமு லகபர’ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் நீல வானத்தைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் 03வது சமுத்திர படைப்பிரிவு, தாய்நாட்டைப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொண்டுவரும் உயர்ந்த சேவை, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டும் வகையில், ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டன.
இலங்கை வான்வெளியைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இலங்கை விமானப்படையின் உறுப்பினர்களாக விமானப்படையில் இணைந்த 66வது, 67வது மற்றும் 68வது கெடெட் அதிகாரி பாடநெறியை பூர்த்தி செய்த அதிகாரிகளை விமானப் படை அதிகாரிகளாக நியமித்தல் மற்றும் 103வது இலக்க பறக்கும் கெடெட் அதிகாரி பாடநெறியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பறக்கும் அதிகாரி சின்னம் அணிவித்தல் என்பன முப்படைத்தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டது.
பாடநெறியில் அதிவிசேடமான திறமைகளை வெளிப்படுத்திய கெடெட் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விசேட விருதுகள் வழங்கப்பட்டன.
பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க