மகாநாம கல்லூரியில் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம் – சஜித் அதிர்ச்சி வெளிப்பாடு !
கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் குறித்த பாடசாலைக்கு...
கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் திகதி சனிக்கிழமை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து அதிபரோ அல்லது ஆசிரியர்களோ எந்தத் தெளிவானதொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
மருத்துவர்களிடம் அனுப்பும் நடவடிக்கையோ, தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனம் குறித்தோ அல்லது இந்த துஷ்பிரயோகத்தைச் செய்த குற்றவாளிக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை
அதிபர், இது தொடர்பில் பேச முயன்ற இரு ஆசிரியர்களையும் மிரட்டியதாகவும், பெற்றோர்களை நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்குத் தாமதங்கள் மூலம் பயமுறுத்தியுள்ளார்.
மேலும், இவ் விவகாரம் குறித்து முறையான விசாரணையை நடத்தி, குறித்த பிள்ளைகளுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறும், வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தக் குற்றவாளி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த செல்வாக்குக்கும் அடிபணியாமல் விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.