LATEST
டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!
உள்ளூர்

மருத்துவமனை உதவியாளரிடம் தோட்டாக்கள் மீட்பு !

October 23, 2025 · Tamil Ceylon LK

கொழும்பு தேசிய மருத்துவமனையின் உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஐந்து T-56 தோட்டாக்களும் மூன்று 9mm தோட்டாக்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய போதைப்பொருள் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மருத்துவமனை பழைய வெளிநோயாளர் பிரிவின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த அந்த உதவியாளரின் மோட்டார் சைக்கிளிலிருந்து தோட்டாக்களும் வெள்ளைப் பொடியும் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோட்டாக்கள் நபர் மீதான தனிப்பட்ட விரோதத்தால் யாராவது வைத்து இருக்கலாமா? அல்லது அந்த நபரே கொண்டுவந்தாரா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

மேலும் ›