புலம் பெயர் தமிழர்களிடமிருந்து தன்னை பாதுகாக்க ரிவால்வர் வாங்கிய அர்ச்சுனா ! #Video
வெளிநாட்டில் இருந்து கொள்வனவு தற்காப்பு சாதனங்களை...
Published October 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
வெளிநாட்டில் இருந்து கொள்வனவு தற்காப்பு சாதனங்களை வாங்கியதையடுத்து, அவற்றுக்கான பரிசோதனை, பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பை உடனடியாக வழங்க வேண்டியும், ஆபத்து மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா
இலங்கை காவல்துறையின் தலைவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது தற்காப்புக்காக ஜெர்மனியில் தான் வாங்கிய ஒரு ரிவால்வர் வகை, ஒரு பிஸ்டல் வகை மற்றும் நீண்ட தூர மாடல் வகை துப்பாக்கிகளை சட்டபூர்வமாக இலங்கைக்கு கொண்டு வர முடியும? அவ்வாறு இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சட்ட விதிமுறைகளை தனக்கு அறியத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இலங்கை காவல்துறையின் தலைவருக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
