பல பகுதிகளில் பலத்த காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக...
Published October 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு, இடி மின்னல், வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய,தெற்கு, வடக்கு,வட – மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் மணிக்கு சுமார் 50 – 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இலங்கையின் வட,கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக இவ் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.