சீனாவின் வளர்ச்சி இலங்கைக்கு புதிய பாதைகளைத் திறக்கும்.

இலங்கைக்கான சீனத் தூதர் ஜி ஜெங்ஹாங், இலங்கையின்...

Published October 29, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கைக்கான சீனத் தூதர் ஜி ஜெங்ஹாங், இலங்கையின் வளர்ச்சிக்காக கூட்டு முயற்சிகளின் வலுவான பயணத்தை மேற்கொள்ள சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சீனாவும் உலகமும் – வளமான எதிர்காலத்திற்கான சீன-இலங்கை உரையாடல் நேற்று (28) கொழும்பில் உள்ள மரினோ பீச் ஹோட்டலில் நடைபெற்றது.

  • இந்நிகழ்வில் உரையாற்றும் போதே இலங்கைக்கான சீனத் தூதர் திரு. ஜி ஜெங்ஹாங் தெரிவித்துள்ளார்,

“அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி இலங்கைக்கும் புதிய பாதைகளைத் திறக்கும். இலங்கையுடன் மிக நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். அது இலங்கைக்கு உதவும்.”
“வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். புதிய பரிமாணங்கள் மற்றும் புதிய கூட்டுறவு நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை நாம் துரிதப்படுத்த முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந் நிகழ்வில் பங்கேற்ற தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த கூறுகையில்,

“புதுமை இலங்கைக்கு வழி வகுக்கும். ஆனால் நமக்கு சில தடைகள் உள்ளன. நமது பொருளாதாரச் சிரமங்களைச் சமாளித்தவுடன், டிஜிட்டல் மயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்தோம்.” “மேலும் புதுமைக்கும். இதற்கு உலகின் பிற நாடுகளின் ஆதரவு நமக்குத் தேவை. இது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம்.” என தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *