மகளிர் உலக கிண்ணம் – இறுதிப்போட்டிக்கு தென்னாபிரிக்க அணி தகுதி.

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்று (29) இடம்பெற்ற...

Published October 30, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்று (29) இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 125 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டு தென்னாபிரிக்க மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இப் போட்டியில் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் – அணித் தலைவி Laura Wolvaardt 169 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் – Sophie Ecclestone அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 320 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்மூலம் தென்னாபிரிக்க மகளிர் அணி முதன் முறையாக உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *