LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உள்ளூர்

கடல் வழியாக இலஙகை கடத்த முயன்ற பக்தி பாக்கெட்டுகள் பறிமுதல்

November 2, 2025 · Tamil Ceylon LK

ராமநாதபுரம் மாவட்டம்  தனுஷ்கோடி அடுத்த சேரன்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸ் ஆய்வாளர் ஜானகி தலைமையில் கியூ பிரிவு பொலிஸார்  சேரான் கோட்டை கடற்கரை பகுதியை  இன்று அதிகாலை  கண்காணித்தனர்.

இதன் போது கோவை மாவட்டம்  பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தில்  12 அட்டைப் பெட்டிகளில் இருந்த  720 கொசு விரட்டும் பத்தி பெட்டிகளுடன் வாகனத்தின் சாரதி உட்பட   இருவர் பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்த போது இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

 விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் சட்டவிரோதமாக  கடத்துவதற்காக 12 அட்டைப்பெட்டிகளில் கொசு விரட்டும் பத்திகளை  இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. பத்திகள், சரக்கு  வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து   ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் இடம்  கியூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்தனர்.

Related Stories

மேலும் ›