ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்
அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட ஒரு தலைமை ஆசிரியரின்
அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட ஒரு தலைமை ஆசிரியரின் மனைவியும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேலியகொட நகர சபை உறுப்பினருமான டிஸ்னா நிரஞ்சலா, பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரின் சொத்துக்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்காக தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸாரால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அநுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்திற்கு நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.