இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இந்திய மீனவர்களை கடற்படையினர்
Published November 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது ஒரு படகையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.