அஸ்வெசும கொடுப்பனவு இன்று

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 11 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை இதற்கென வங்கிகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்தமாக 11,232,408,750 ரூபா வைப்பிலிடப்படும்.
14 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இதனூடாக நன்மையடையவுள்ளனர்.
Follow & Share




