போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 865 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற

Published November 19, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 867 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 20 கிலோ 616 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 44 கிலோ 508 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 06 கிலோ 914 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 28,225 கஞ்சா செடிகளும், 77 கிராம் குஷ் போதைப்பொருளும், 28 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 472 மாத்திரைகளும் , 209 மதனமோதக மாத்திரைகள், 4 கிலோ 484 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் 30 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.