விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், கொழும்பு - கட்டுநாயக்க

Published November 30, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைத் தொடர்ந்தும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்கான சில பிரவேச வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்காலப்பகுதியில் விமான நிலைய வளாகத்தினுள் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, பயணிகளுடன் விருந்தினர்களை முனையத்திற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனம் பயணிகளிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.

சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் விமான நிலைய செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குப் பயணிகள் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வைப் பாராட்டுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *